திரைப்படங்களைக் காட்டிலும் தொலைக்காட்சி தொடர்கள் மக்களிடம் எளிதில் சென்றடைவதால், நாளுக்கு நாள் தொலைக்காட்சி தொடர்களில் பல புதிய யுக்திகள் கையாளப்பட்டுள்ளது. திரைப்படங்களுக்கு இணையாக காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என்று பல அம்சங்களைக் கொண்டு உருவாகும் சீரியல்களில் திரைப்பட நடிகர்களும் நடிக்க தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில், நடிகை ராதிகா 7 வேடங்களில் நடிக்கும் சீரியல் ஒன்று பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது. சீரியல் உலகில் முன்னணியில் இருக்கும் ராதிகா, தற்போது ‘வாணி ராணி’ என்ற சீரியலை தயாரித்து நடித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் முடியும் தருவாயில் உள்ள நிலையில், தனது ராடான் நிறுவனம் மூலம் புதிய சீரியல் ஒன்றை ராதிகா தயாரித்து நடிக்க உள்ளார்.
’சந்திரகுமாரி’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த சீரியல் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சரித்திரமும், சமூகமும் என மாறி மாறி பயணிக்கும் இந்த சீரியலில் ராதிகா 7 வேடங்களில் நடிக்க, திரைப்பட நடிகை பானு அவரது மகள் வேடத்தில் நடிக்கிறார்.
சரித்திர பாகங்களை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, சமூக பாகங்களை சி.ஜே.பாஸ்கர் இயக்குகிறார். சிற்பி இசையமைக்கும் இந்த சீரியலுக்கு பாலமுருகன் மற்றும் பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கின்றனர்.
சென்னை மற்றும் மும்பையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த சீரியல் வரும் அக்டோபர் மாதம் முதல் சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாக உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...