இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்று ஒரே சமயத்தில் மூன்று அவதாரங்களை எடுத்த சசிகுமார், தொடர்ந்து நடிப்பதிலும் படம் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தவர், தொடர் தோல்விப் படங்களினால் தயாரிப்பதை சற்று தவிர்த்து, பிற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, சசிகுமார் தயாரித்து நடித்து மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். எப்போதும் அறிமுக நடிகைகளை தனது படங்களில் ஹீரோயினாக்கும் சசிகுமார், இந்த படத்தில் முன்னணியில் இருக்கும் கீர்த்தி சுரேஷை ஹீரோயினாக்கியிருக்கிறார். இதற்காக கீர்த்தி சுரேஷுக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கொம்பு வச்ச சிங்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஆரம்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...