காமெடி நடிகர் மனோபாலா தான் தயாரித்த ‘சதுரங்க வேட்டை’ வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தை தொடர்ந்து பாபி சிம்ஹாவை ஹீரோவா வைத்து ‘பாம்பு சட்டை’ என்ற படத்தை தயாரித்தார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றே கூறப்படுகிறது.
இதற்கிடையே, அரவிந்த்சாமியை வைத்து ‘சதுரங்க வேட்டை 2’ படத்தை மனோ பாலா தயாரித்தார். ஆனால் நிதி நெருக்கடியால் இப்படத்தை முடிக்க அவர் ரொம்ப சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ’சதுரங்க வேட்டை 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவதும் முடிவடைந்த நிலையில், ஹீரோ அரவிந்த்சாமிக்கு சம்பளம் முழுமையாக செட்டில் செய்யவில்லையாம். இதையடுத்து, தனது சம்பளபாக்கியான ரூ.1.79 கோடியை வட்டியுடன் கொடுக்க வேண்டும், என்று அரவிந்த்சாமி மனோ பாலா மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்யும்படி மனோ பாலாவுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்த மனோ பாலா, அரவிந்த்சாமியுடன் சமரசமாக செல்ல இருப்பதாகவும், முதல் தவனையாக ரூ.25 லட்சம் தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
மனோ பாலாவின் மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், அரவிந்த்சாமி, மனோ பாலா இரு தரப்பினரையும் அக்டோபர் 12 ஆம் தேதி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதிமன்றத்தில் அறிவிக்காமல் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தை வெளியிட மாட்டேன், என்றும் மனோ பாலா உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...