Latest News :

பரவசக் கவிஞரை பாடலாசிரியராக்கிய இசையரசர் தஷி!
Tuesday September-25 2018

சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருது பெற்ற இசையரசர் தஷி, திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக இருந்தாலும் அவ்வபோது பல தனி இசை ஆல்பங்களுக்கு இசையமைத்து தயாரித்தும் வருபவர், இதன் மூலம் பல புதிய கலைஞர்களை பாடலாசிரியர்களாகவும், பாடகர்களாகவும் அறிமுகம் செய்கிறார்.

 

அந்த வகையில், 40 ஆண்டுகளாக கவிதை, புத்தகம், இலக்கியம் என்று எழுத்து பணியில் ஈடுபட்டு வரும் பரவசக் கவிஞர் பரந்தூர் ராமாசாமி அவர்களை, இசையமைப்பாளர் தஷி, ‘உள்ளம் உருகுதே கண்ணா’ என்ற ஆன்மீக ஆல்பத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

கண்ணன் குறித்து பரவசக் கவிஞர் பரந்தூர் ராமசாமியின் பக்திமயமான வரிகளுக்கு, கேட்பவர்கள் உருகிவிடும் அளவுக்கு தஷியின் மெல்லிசையில் உருவாகியிருக்கும் இந்த ஆல்பத்தின் 5 பாடல்களும் கேட்பவர்களை நிச்சயம் உருக வைக்கும்.

 

துஷிதா என்ற பெங்காலி பாடகி முதல் முறையாக இந்த ஆல்பத்தின் மூலம் தமிழில் பாடியிருக்கிறார். திவ்யா, நிரஞ்சன் என்ற அறிமுக பாடகர்களின் இனிமையான குரலில் உருவாகியிருக்கும் பாடல்களோடு மொத்தம் 5 பாடல்களை கொண்ட இந்த ‘உள்ளம் உருகுதே கண்ணா’ ஆன்மீக ஆல்பம் கண்ணன் பாடல்களில் தனி சிறப்பு பெரும் என்பது உறுதி.

 

இந்த இசை ஆல்பம் குறித்து பேசிய இசையமைப்பாளர் தஷி, “பரவசக் கவிஞர் பரந்தூர் ராமசாமி 40 ஆண்டுகளாக கவிதை, புத்தகம் ஆகியவைகளை எழுதி வருகிறார். அவரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் கவி சக்கரவர்த்தி காஞ்சி தென்றல் தான். பெரும்பாலும் ஒரு கவிஞர், மற்றொரு கவிஞருக்கு சிபாரிசு செய்ய மாட்டார்கள். ஆனால், காஞ்சி தென்றல் என்னிடம் பரந்தூர் ராமசாமியை சிபாரிசு செய்து, இவர் பல ஆண்டுகளாக கவிதை எழுதுகிறார். இவரை வைத்து ஆன்மீக ஆல்பம் தயாரிக்க வேண்டும், என்று கூறினார்.

 

அதன்படி, பரவசக் கவிஞர் எழுதிய 5 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ‘உள்ளம் உருகுதே கண்ணா’ என்ற தலைப்பில் இந்த ஆன்மீக ஆல்பத்தை தயாரித்திருக்கிறோம். இதன் பாடல்கள் அத்தனையும் கேட்பதற்கு ரொம்பவே இனிமையாக இருக்கும்.” என்றார்.

 

Ullam Uruguthey Kanna Music Album

 

சமீபத்தில் நடைபெற்ற ‘உள்ளம் உருகுதே கண்ணா’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர் தஷி கலந்துக்கொண்டு இசை குறுந்தகடை வெளியிட, பாடல்கள் எழுதிய பரவசக் கவிஞர் பரந்தூர் ராமசாமி பெற்றுக் கொண்டார். பாடல்களை பாடியவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள். 

Related News

3492

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

கூலி படத்தின் “மோனிகா...” பாடலும், சக்தி மசாலாவின் விளம்பர யுத்தியும்!
Wednesday September-17 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...

Recent Gallery