இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை ரசிகர்கள், ஊடகங்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினர் பாராட்டி வருகிறார்கள்.
கதிர், ஆனந்தி என படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களின் நடிப்பையும் ஊடகங்கள் வெகுவாக பாராட்டி வருகின்றது.
இந்த நிலையில், நடிகர் விஜய் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பார்க்க ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஹீரோ கதிருக்கு போன் செய்து அவரை வெகுவாக பாராட்டிய விஜய், படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுடன் பேசுகிறேன், என்று கூறினாராம்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...