‘தரமணி’ வெற்றியை தொடர்ந்து ஜெ.எஸ்.கே பிலிம் கார்ப்போரேஷன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் ‘ஹெளரா பிரிட்ஜ்’ திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை லோஹித் இயக்குகிறார். தரமணியை போல பெண் கதாபாத்திரதை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் பிரியங்கா உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது மகளாக ஐஸ்வர்யா நடிக்கிறார்.
முழுக்கம் முழுக்க கொல்கத்தாவில் கதை நடப்பது போல திரைக்கதை எழுதப்பட்டுள்ள இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் கூறுகையில், “ஹெளரா பிரிட்ஜ் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள திரில்லர் கதை. செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதம் நடக்க உள்ளது. இக்கதை ஓட்டத்திற்கு கொல்கத்தா நகரம் மிக பொருத்தமான நகராக இருப்பதால் படப்பிடிப்பை அங்கு நடத்த உள்ளோம். இப்படம் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு மேலும் மதிப்பை கூட்டும் என உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.
தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது...
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது...
After more than a decade of reshaping Indian film music with award-winning background scores, chart-topping albums, and viral anthems, renowned composer and performer Anirudh Ravichander has announced the launch of Albuquerque Records, an artist-owned music label that marks a defining new chapter in his creative journey...