‘தரமணி’ வெற்றியை தொடர்ந்து ஜெ.எஸ்.கே பிலிம் கார்ப்போரேஷன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் ‘ஹெளரா பிரிட்ஜ்’ திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை லோஹித் இயக்குகிறார். தரமணியை போல பெண் கதாபாத்திரதை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் பிரியங்கா உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது மகளாக ஐஸ்வர்யா நடிக்கிறார்.
முழுக்கம் முழுக்க கொல்கத்தாவில் கதை நடப்பது போல திரைக்கதை எழுதப்பட்டுள்ள இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் கூறுகையில், “ஹெளரா பிரிட்ஜ் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள திரில்லர் கதை. செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதம் நடக்க உள்ளது. இக்கதை ஓட்டத்திற்கு கொல்கத்தா நகரம் மிக பொருத்தமான நகராக இருப்பதால் படப்பிடிப்பை அங்கு நடத்த உள்ளோம். இப்படம் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு மேலும் மதிப்பை கூட்டும் என உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...