Latest News :

இயக்குநர் மணிரத்னத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! - போலீசார் விசாரணை
Tuesday October-02 2018

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘செக்கச்சிவந்த வானம்’ வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் இப்படம் பல இடங்களில் நல்ல வசூலையும் ஈட்டு வருகிறது.

 

இந்த நிலையில், இயக்குநர் மணிரத்னத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு தொலை பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

 

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும், என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Related News

3521

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery