மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘செக்கச்சிவந்த வானம்’ வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் இப்படம் பல இடங்களில் நல்ல வசூலையும் ஈட்டு வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர் மணிரத்னத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு தொலை பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும், என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...