விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘96’. முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியும், திரிஷாவும் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருப்பதாலும், விஜய் சேதுபதி முதல் முறையாக காதல் திரைப்படத்தில் நடித்திருப்பதாலும் இப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஏற்றவாறு கடந்த 1 ஆம் தேதியே இப்படத்தினை பத்திரிகையாளர்களுக்கு படக்குழு போட்டுக்காட்டினார்கள். படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டியதோடு, அன்றில் இருந்து படத்தின் விமர்சனங்களையும் எழுத தொடங்கிவிட்டார்கள்.
பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் ‘96’ படம் குறித்து பாசிட்டிவான செய்திகளும், விமர்சனங்களும் தொடர்ந்து வெளியானதால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில், இன்று வெளியாக இருந்த ‘96’ படத்தின் வெளியீட்டில் திடீரென்று பிரச்சினை ஏற்பட்டதாகவும், பிறகு பேச்சுவார்த்தை மூலம் அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு படம் ரிலீஸாகியுள்ளதாக, பிரபல தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘96’ படத்தின் ரிலிஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளாருமான விஷால் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

96 படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் தான் விஷாலின் ‘கத்திசண்டை’ படத்தை தயாரித்தார். இந்த படம் தொடர்பாக அவருக்கும் விஷாலுக்கும் பண விவகாரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறதாம். இதை காரணம் காட்டி, ‘96’ படத்தின் ரிலிஸுக்கு விஷால் முட்டுக்கட்டை போட்டதாக, தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் விஷாலிடம் விசாரிப்பதற்காக அவரை போனில் தொடர்புகொண்டார். அவரது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாகவும், அவர் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால், ஒரு படத்தின் ரிலிஸுக்கு இப்படி முட்டுக்கட்டை போடுவது சரியா? பிரச்சினை என்னவாக இருந்தாலும், அதை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, இப்படி படத்தின் ரிலீஸுக்கு முட்டுக்கட்டையாக இருக்க கூடாது, இது குறித்து விஷால் விளக்கம் அளிக்க வேண்டும், என்றும் ஜே.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘96’ படம் ரிலீஸில் பிரச்சினை வந்தபோது, இப்படத்திற்காக குறைவான சம்பளத்தை பெற்றிருந்தாலும், அதில் ரூ.1 கோடியை விட்டுக்கொடுக்க விஜய் சேதுபதி முன்வந்திருப்பதாகவும், ஜே.சதீஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...