நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சிக்காக தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இது, முதல் சீசனைப் போல சுவாரஸ்யமாக இல்லை, என்ற விமர்சனம் எழுந்தாலும் நிகழ்ச்சி வெற்றிக்கரமாக முடிந்தது.
பிக் பாஸின் இரண்டாவது சீசனில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் இறுதியாக ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகியோர் அனைத்து கட்டங்களையும் கடந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் இறுதிப் போட்டியில் இடம்பெற்ற போட்டியாளர்கள் நான்கு பேரும் பெண்கள் என்பது இது தான் முதல் முறை.
இந்த நான்கு பேர்களில் நடிகை ரித்விகா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரசிகர்களின் பெரும் ஆதரவு இருந்தததால், அவரை பிக் பாஸ் வெற்றியாளராக அறிவித்தனர். ரசிகர்களும் அதனை வரவேற்றனர்.
இப்படி பிக் பாஸ் சீசன் 2-வின் டைடிலை வென்ற ரித்விகா, ஒரு வாரமாக எங்கும் தலை காட்டாமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.
தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் ரித்விகா, “எல்லாருக்கும் வணக்கம். நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது, நிறைய பேர் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணிருக்கீங்க. நான் வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது. ரித்விகா பேன்ஸ், ரித்விகா ஆர்மி என நிறைய கணக்குகளை தொடங்கி எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கிறீர்கள். இந்த ஒரு வாரம் நான் நேரம் எடுத்துக் கொண்டேன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. அதனால் தான் இந்த வீடியோவை தாமதமாக வெளியிடுகிறேன்.
விரைவில் சமூக வலைதளங்களில் உங்களை நேரலையில் கலந்துரையாடுகிறேன். அனைவருக்கும் நன்றி.” என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ,
Thank u all 🙏🏻🙏🏻🙏🏻@RithvikaWarrior @Rithvika_Army @RiythvikaArmy @riythvika pic.twitter.com/ckN5jH67uW
&mdas h; Riythvika✨ (@Riythvika) October 6, 2018
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...