Latest News :

வாடகை வீட்டுக்காக போலி கணவர்! - மனம் திறந்த நடிகை நிலானி
Tuesday October-09 2018

உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாக, நடிகை நிலானி போலீஸில் புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்திய போலீஸார், சமரசம் செய்து அனுப்பி வைத்த நிலையில், லலித்குமார் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

 

லலித்குமார் தற்கொலைக்கு நிலானி தான் காரணம், என்று கூறிய லலித்குமார் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாரிடம் வலியுறுத்தி வந்த நிலையில், நிலானி லலித்குமார் குறித்து பல திடுக்கும் தகவல்களை கூறினார். இது லலித்குமார் குடும்பத்தாரிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், அவர்கள் நிலானி, லலித்குமார் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டதோடு, மேலும் பல ஆதாரங்களையும் வெளியிடுவோம், என்று கூறினார்கள்.

 

இதற்கிடையே, நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த அவர், தற்போது வீடு திரும்பியுள்ளார்.

 

இந்த நிலையில், இன்று நடிகை நிலானி அளித்திருக்கும் பேட்டியில், லலித்குமார் குடும்பத்தார் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து பேசியதோடு, லலித்குமாரை தான் ஏன்? கணவர் என்று கூறினேன், என்பதற்கான காரணத்தையும் மனம் திறந்து கூறியுள்ளார்.

 

இது குறித்து கூறிய நிலானி, “எனக்கு பலருடன் தொடர்பு இருப்பதாக செய்தி பரப்பினார்கள். தொழிலதிபர், தியேட்டர் அதிபருடன் தொடர்பு என்றார்கள்.. நான் சொகுசாக வாழ நினைத்திருந்தால் அப்படி செய்திருக்கலாம். அது உண்மையாக இருந்தால் இப்படி நான் பேசிக்கொண்டிருக்கமாட்டேன்.. கொடுக்கவேண்டிய இடத்தில் பணம் கொடுத்து போய்கிட்டே இருந்திருப்பேன்.

 

நடிகை என்றாலே இந்த சமூகத்தில் தவறாக நினைக்கிறார்கள், நான் இப்போது 30 வீடுகளுக்கும் மேல் வாடகைக்கு கேட்டு சென்றுவிட்டேன், கணவர் இல்லை தனியாக இருக்கிறேன் என கூறினால் வீடு தரமாட்டேன் என்கிறார்கள். அதனால் பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டது, அதை காந்தி உண்மையாக்கினார்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

3566

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...

’ஃப்ரேம் & ஃபேம்’ தலைப்பில் திரை கலைஞர்களுக்கு விருது வழங்கும் டூரிங் டாக்கீஸ்!
Wednesday December-17 2025

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...

Recent Gallery