சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படம் எப்படி மக்களை உலுக்கியதோ அதுபோல, மக்கள் மனதில் அழுத்தமாக பதியும் ஒரு திரைப்படமாக ‘மனுசங்கடா’ படம் உருவாகியுள்ளது.
பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினையும், பல விருதுகளையும் வென்றிருக்கும் இப்படத்தை ஏ.கே.பிலிம்ஸ் தயாரிக்க, தேசிய விருது பெற்ற அம்ஷன் குமார் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.
மத்திய அரசால் கோவாவில் ஆண்டு தோறும் நடத்தப்படும் உலகத் திரைப்பட விழாவில், கடந்த ஆண்டு திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புகழ் பெற்ற கெய்ரோ உலகத் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது.
ரஜீவ் ஆனந்த், சசிகுமார், மணிமேகலை, ஷீலா, விது, ஆனந்த் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு பி.எஸ்.தரன் ஒளிப்பதிவு செய்ய, அரவிந்த் - சங்கர் இசையமைத்துள்ளனர். இன்குலாப் பாடல்கள் எழுத, தனசேகர் படத்தொகுப்பு செய்துள்ளார். தாரா, கண.நட்குணன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
பல பரபரப்பான உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு, தீண்டாமைக் கொடுகள் பற்றி பேசும் இப்படம் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியாகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...