சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படம் எப்படி மக்களை உலுக்கியதோ அதுபோல, மக்கள் மனதில் அழுத்தமாக பதியும் ஒரு திரைப்படமாக ‘மனுசங்கடா’ படம் உருவாகியுள்ளது.
பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினையும், பல விருதுகளையும் வென்றிருக்கும் இப்படத்தை ஏ.கே.பிலிம்ஸ் தயாரிக்க, தேசிய விருது பெற்ற அம்ஷன் குமார் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.
மத்திய அரசால் கோவாவில் ஆண்டு தோறும் நடத்தப்படும் உலகத் திரைப்பட விழாவில், கடந்த ஆண்டு திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புகழ் பெற்ற கெய்ரோ உலகத் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது.
ரஜீவ் ஆனந்த், சசிகுமார், மணிமேகலை, ஷீலா, விது, ஆனந்த் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு பி.எஸ்.தரன் ஒளிப்பதிவு செய்ய, அரவிந்த் - சங்கர் இசையமைத்துள்ளனர். இன்குலாப் பாடல்கள் எழுத, தனசேகர் படத்தொகுப்பு செய்துள்ளார். தாரா, கண.நட்குணன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
பல பரபரப்பான உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு, தீண்டாமைக் கொடுகள் பற்றி பேசும் இப்படம் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...