தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகராகி கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி தொடர்ந்து பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். இது குறித்து டிவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரீட்வீட் செய்த பதிவு ஒன்றை, பாடகி சின்மயியும் ரீட்வீட் செய்தார். இதில் இருந்து தொடங்கிய இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.
வைரமுத்து மீதான சின்மயின் பாலியல் புகாருக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் வைரமுத்துவின் ரசிகர்கள், சின்மயியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக வைரமுத்து மெளனமாக இருப்பதையும் சிலர் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பாலியல் புகார் விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து, முதல் முறையாக பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக வைரமுத்து தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என்று தெரிவித்துள்ளார்.
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
— வைரமுத்து (@vairamuthu) October 10, 2018
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...