தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகராகி கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி தொடர்ந்து பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். இது குறித்து டிவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரீட்வீட் செய்த பதிவு ஒன்றை, பாடகி சின்மயியும் ரீட்வீட் செய்தார். இதில் இருந்து தொடங்கிய இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.
வைரமுத்து மீதான சின்மயின் பாலியல் புகாருக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் வைரமுத்துவின் ரசிகர்கள், சின்மயியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக வைரமுத்து மெளனமாக இருப்பதையும் சிலர் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பாலியல் புகார் விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து, முதல் முறையாக பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக வைரமுத்து தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என்று தெரிவித்துள்ளார்.
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
— வைரமுத்து (@vairamuthu) October 10, 2018
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...