நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின், புதிய வீட்டில் இருந்து 2 பசு மாடுகள் திருடு போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்த், குடும்பத்தோடு வசித்து வருகிறர். இதற்கிடையே, சென்னை காட்டுப்பாக்கத்தில் புதிய வீடு ஒன்றையும் விஜயகாந்த் கட்டி வருகிறார். இந்த புதிய வீட்டில் பல செல்லப்பிராணிகளும், கால்நடைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த இரண்டு பசு மாடுகள் திடீரென மாயமாகியுள்ளன. பசுமாடுகள் மாயமானது குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் வீட்டில் இருந்து பசு மாடுகள் திருடப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...