பிரபல ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன், இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கோலி சோடா’ மாபெறும் வெற்றி பெற்றதை. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கோலி சோடா 2’ என்ற தலைப்பில் விஜய் மில்டன் இயக்கி வருகிறார்.
விஜய் மில்டனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் தயாரிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக, ‘கடுகு’ படத்தில் கதாநாயகியாக நடித்த சுபிக்ஷா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த தகவலை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ‘கோலி சோடா 2’ படத்தின் டீசர் ஒன்றை விரைவில் வெளியிட உள்ள விஜய் மில்டன், அந்த டீசரின் ஆரம்பத்தில் இயக்குநர் கவுதம் மேனனை பேச வைத்துள்ளார். அவரது குரல் டீசருக்கு மேலும் வலுவூட்டும் வகையில் அமைந்திருப்பதாக சமீபத்தில் விஜய் மில்டன் தெரிவித்திருந்தார்.
தற்போது டீசர் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி டீசரை வெளியிட விஜய் மில்டன் முடிவு செய்துள்ளார். கவுதம் மேனனின் குரல் பலத்தோடு உருவாகியுள்ள ’கோலி சோடா 2’ படத்தின் டீசர் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...