பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறும் பாலியல் புகாருக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருவதோடு, சின்மயி கூறுவதில் உண்மை இருக்கிறது, என்றும் கூறி வருகிறார்கள்.
சின்மயி பாலியல் புகார் தெரிவித்த போது அவருக்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர் நடிகை சமந்தா. அவரை தொடர்ந்து சித்தார்த், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்த நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்ததோடு, சின்மயி நடந்த சம்பவத்தை விவரமாக தெரிவித்துள்ளார். அவர் சொல்வதில் உண்மை உள்ளது, என்று கூறினார்.
மேலும், தொடர்ந்து மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்து வரும் வரலட்சுமி, பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக பேச வேண்டும், என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், தான் 5 பேரால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், என்று வரலட்சுமி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வரலட்சுமி நடத்தி வரும் ‘உன்னை அறிந்தால்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தான் சிறுமியாக இருந்த போது கிட்டதட்ட 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்தனர், இதை தெரிவிக்க தான் வெட்கப்படவில்லை, என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே பிரபல தொலைக்காட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார், என்று வரலட்சுமி புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...