விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சண்டக்கோழி 2’ வரும் அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது. முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தில் பல சுவாரஸ்யமான அம்சங்கள் இருக்கும் என்பது படத்தின் டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.
இதில், விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷுன் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பெரிய அளவில் பேசப்படுவதோடு, வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமியின் வேடம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘சண்டக்கோழி 2’ வில் முன்னணி நடிகர் ஒருவர் பணியாற்றியுள்ளார். இதுநாள் வரை இதை ரகசியமாக வைத்திருந்த படக்குழு தற்போது அது யார்? என்பதை தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து இயக்குநர் லிங்குசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ”சண்டக்கோழி-2”வில் வாய்ஸ் ஓவர் கொடுத்ததற்காகவும் இப்படக்குழுவில் இணைந்தமைக்காகவும் கார்த்திக்கு எனது சிறப்பு நன்றிகள்” எனக் கூறியுள்ளார்.

ஆம், ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிகர் கார்த்தி பின்னணி குரல் கொடுத்திருக்கிரார். அதேசமயம், பின்னணி குரல் கொடுத்த கார்த்தி படத்திலும் தோன்றிருப்பாரோ, என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...