‘நாட்டாமை’ படத்தில் கவர்ச்சி டீச்சர் வேடத்தில் நடித்த நடிகை ராணி, தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் சண்முகராஜான் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து விசாரணை நடத்தி போலீசார் நடவடிக்கை எடுக்கு முயன்ற போது, இந்த விவகாரம் தொடர்பாக சமரசம் பேசப்பட்டு, சண்முகராஜன் ராணியிடம் மன்னிப்பு கேட்டதால், பிரச்சினை முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், நடிகை ராணி மீது சண்முகராஜன் நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில், இத்தை வருட அனுபவத்தில் இப்படி ஒரு குற்றச்சாட்டு என் மீது வந்தது கிடையாது.
கை கலப்பாக நடந்த விவகாரத்தை பாலியல் புகார் என தவறாக கூறிவிட்டார். இந்த குற்றச்சாட்டிற்காக நடிகை ராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், எனக்கு ரெட் கார்ட் போட்டாலும் பரவாயில்லை சினிமாவை விட்டு விலக தயார்.
அதே போல், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...