Latest News :

சின்மயி செயலால் குடும்ப பெண்களுக்கும் கெட்டப்பெயர் - தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் காட்டம்
Wednesday October-17 2018

பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது தெரிவித்து வரும் பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். வைரமுத்து மீது உலருக்கு உள்ள காற்புணர்ச்சியின் வெளிப்பாடே இந்த பாலியல் புகார், என்றும் கூறுகிறார்கள்.

 

இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், சின்மயின் பாலியல் புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, அவரது இத்தகைய செயலால், குடும்ப பெண்களுக்கும் கெட்டப் பெயர் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

விஜயின் ‘புலி’, ஜீவாவின் ‘போக்கிரி ராஜா’, பிரபு நடித்த ‘பந்தா பரமசிவம்’ ஆகிய படங்களை தயாரித்திருக்கும் பி.டி.செல்வகுமார் ’ஒன்பதுல குரு’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

 

சின்மயி விவகாரம் தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய பி.டி.செல்வகுமார், “வைரமுத்துவுக்கும் எனக்கும் எந்த பழக்கமும் இல்லை, அவரது செல்போன் எண் கூட என்னிடம் இல்லை. இந்த விஷயத்தை நான் பொதுவான முறையில், திரைப்படத்துறையை சேர்ந்தவன் என்ற முறையில் தான் பேசுகிறேன்.

 

எப்போதோ, சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறும் ஒரு சம்பவத்தை சின்மயி இப்படி கூறுவது சரியானதல்ல. வைரமுத்து தமிழ் சினிமாவில் முக்கியமானவர் மட்டும் அல்ல, 6 முறை தேசிய விருது பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர். பல உயரிய பாடல்களை கொடுத்தவர். அவர் இந்த நிலையை அடைய எவ்வளவு உழைத்திருப்பார், எத்தனை இரவுகள் தூங்காமல் இருந்திருப்பார். அப்படி ஒரு மரியாதை மிக்கவர் மீது சின்மயி இப்படி ஒரு புகார் கூறுவது மிகவும் தவறு.

 

சம்பவம் உண்மையாகவே நடந்ததாக இருக்கட்டும். அதை அப்போதே கூறியிருக்கலாமே, அல்லது இந்தியா வந்த பிறகாவது அதை பதிவு செய்திருக்கலாம். அப்போது விட்டுவிட்டு, இப்போது ஏன் புகார் கூற வேண்டும். வைரமுத்து ஒரு தமிழர் என்பதால் தான் அவர் மீது இப்படி பழி சுமத்தப்படுவதாக நான் எண்ணுகிறேன். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்பில்லை, தொழில்கள் முடங்கியுள்ளன, இவைகள் மீதுள்ள மக்களின் பார்வையை திசை திருப்பவே, இந்த விஷயத்தை தற்போது ஊதி பெரிதாக்குகிறார்களோ, என்று எண்ண தோன்றுகிறது.

 

சின்மயின் புகாரை ஏற்றுக் கொண்டால் அவரைப் போல பலர் பொய்யான புகார் கூறுவார்கள். பிறகு யார் மீது வேண்டுமானால், யார் மீதும் புகார் கூறலாம் என்றாகிவிட்டது என்றால் சமூகத்திற்கு நன்றாக இருக்காது.

 

சினிமாவில் பாலியல் துன்புறத்தல் இருக்கிறதா? உங்களிடம் தவறாக நடந்துக் கொள்கிறார்களா? முடியாது என்று விலகி விடுங்கள், அப்படி இல்லையா போலீசில் புகார் தெரிவியுங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள், அதைவிட்டுவிட்டு இப்படி தினம் தினம் ஒரு தகவலை கூறுவது, உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்வதற்கு சமமாமும். சின்மயி போன்றவர்களின் செயலால், சினிமாவில் உள்ள பல குடும்ப பெண்களுக்கும் கெட்டப் பெயர் ஏற்படுகிறது.” என்று தெரிவித்தார்.

Related News

3615

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

கூலி படத்தின் “மோனிகா...” பாடலும், சக்தி மசாலாவின் விளம்பர யுத்தியும்!
Wednesday September-17 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...

Recent Gallery