61 வது படமாக உருவாகி வரும் ‘மெர்சல்’ படத்தில், தனது 60 படங்களில் செய்யாத ஒன்றை விஜய் செய்துள்ளார். இது ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகின்றனர்.
ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படமாக உருவாகும் ‘மெர்சல்’ படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அட்லி இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என்று மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பெரும் வரவேற்பு பெற்றதோடு, பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தீபாவளிக்கு ரிலிஸாக உள்ள இப்படத்தின் புரோமோஷன்கள் அனைத்திலும் புதுமையை மேற்கொள்ள முடிவு செய்துள்ள தயாரிப்பு தரப்பு, ‘மெர்சல்’ படத்தின் தீம் பாடல் ஒன்றையும் உருவாக்கி வருகிறதாம்.
இதுவரை விஜயின் எந்த படத்திற்கும் தீம் பாடல் வெளியிடப்படாத நிலையில், ‘மெர்சல்’ படத்திற்காக முதல் முறையாக தீம் பாடல் வெளியிடப்பட உள்ளது. இந்த பாடலில் சென்னை ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த வரிகள் இடம்பெறுவதுடன் விஜயின் வெற்றிகளையும் சொல்லியிருக்கிறார்களாம்.
ரசிகர்களின் விருந்தாக மட்டும் இன்றி சினிமா ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் விதத்தில் உருவாகி வரும் இந்த தீம் பாடலை விரைவில் வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...