Latest News :

வெளிநாட்டில் இருக்கும் நடிகை சுஹாசினி மகனுக்கு பிரச்சினை!
Monday August-28 2017

இத்தாலி நாட்டில் அரசியல் மற்றும் தத்துவியல் படித்து வரும் பிரபல இயக்குநர் மணிரத்னம் - நடிகை சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

 

நந்தனிடம் இருந்த பணம் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் சிலவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் அவர் தன்னம் தனியாக பரிதவித்துள்ளார். 

 

இந்த விஷயத்தை அவர் தனது அம்மா சுஹாசினிக்கு தெரியப்படுத்தியதும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது மகன் பிரச்சினையில் சிக்கியுள்ளார், யாராவது வெனிஸ் மார்க் சதுக்கம் பக்கம் இருந்தால் அவருக்கு உதவி செய்யுங்கள், என்று தெரிவித்திருந்தார். இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஆனால், சில மணி நேரங்களுக்கு பிறகு, தனது மகன் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு உதவிய நல் உள்ளங்களுக்கு எனது நன்றிகள், என்று சுஹாசினி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

தனது பொருட்கள் திருடு போனது குறித்து நந்தன், இத்தாலி போலீஸில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related News

363

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery