இத்தாலி நாட்டில் அரசியல் மற்றும் தத்துவியல் படித்து வரும் பிரபல இயக்குநர் மணிரத்னம் - நடிகை சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், பிரச்சினையில் சிக்கியுள்ளார்.
நந்தனிடம் இருந்த பணம் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் சிலவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் அவர் தன்னம் தனியாக பரிதவித்துள்ளார்.
இந்த விஷயத்தை அவர் தனது அம்மா சுஹாசினிக்கு தெரியப்படுத்தியதும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது மகன் பிரச்சினையில் சிக்கியுள்ளார், யாராவது வெனிஸ் மார்க் சதுக்கம் பக்கம் இருந்தால் அவருக்கு உதவி செய்யுங்கள், என்று தெரிவித்திருந்தார். இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், சில மணி நேரங்களுக்கு பிறகு, தனது மகன் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு உதவிய நல் உள்ளங்களுக்கு எனது நன்றிகள், என்று சுஹாசினி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
தனது பொருட்கள் திருடு போனது குறித்து நந்தன், இத்தாலி போலீஸில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது...
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது...
After more than a decade of reshaping Indian film music with award-winning background scores, chart-topping albums, and viral anthems, renowned composer and performer Anirudh Ravichander has announced the launch of Albuquerque Records, an artist-owned music label that marks a defining new chapter in his creative journey...