கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் சஞ்சனா கல்ராணி, சில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது தங்கையான நிக்கி கல்ராணி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை சஞ்சனா கல்ராணி, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார்.
11 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே சினிமாவுக்குள் நுழைந்த சஞ்சனா கல்ராணியின், முதல் படத்தின் இயக்குநர் அவரை பலவிதத்தில் பயன்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
மர்டர் என்ற இந்திப் படத்தை போட்டுக் காட்டிய இயக்குநர் அப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், கன்னடத்திற்கு ஏற்ப காட்சிகளில் மாற்றம் செய்துகொள்ளலாம் என்றும் சஞ்சனாவிடம் கூறியதோடு, ஒரே ஒரு முத்தக்காட்சியில் மட்டும் நடித்தால் போதும், என்றும் கூறினாராம்.
அதை நம்பி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு பேங்காக் போன சஞ்சனாவை வைத்து பல முத்தக் காட்சிகளை இயக்குநர் படமாக்கியதோடு, அவரை ஆபசமாகவும் படம் பிடித்தாராம். இதெல்லாம் தனக்கு பிடிக்கவில்லை, என்று சஞ்சனா கல்ராணி மறுத்தாலும், அவரை விடாத இயக்குநர், “நாங்கள் சொல்வதை செய்யவில்லை என்றால், உன் கேரியரே நாசமாகிவிடும்” என்று மிரடி அவரை பலவிதத்தில் பயன்படுத்திக் கொண்டாராம்.
தற்போது, தனக்கு நேர்ந்த இந்த பாலியல் கொடுமையை சஞ்சனா கல்ராணி கூறியிருப்பதோடு, அது தொடர்பாக பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருவதால், கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...