Latest News :

வைரமுத்து பற்றி எனக்கு பல விஷயங்கள் தெரியும் - ஏ.ஆர்.ரஹானா
Tuesday October-23 2018

வைரமுத்து பாலியல் புகார் கூறும் சின்மயி, அதற்கான ஆதாரங்களை திரட்டி அவர் மீது வழக்கு தொடர இருப்பதாக கூறினாலும், 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது அவர் பெரிது படுத்துவது ஏன்? என்று தான் அனைவரும் கேட்கிறார்கள். அதேபோல், சின்மயின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல பிரபலங்கள் கருத்து கூறுவதோடு, வைரமுத்து பற்றியும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுகிறார்கள்.

 

அந்த வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி, ஏ.ஆர்.ரஹானா, வைரமுத்து குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

 

இது குறித்து கூறிய ஏ.ஆர்.ரஹானா, “நான் சின்மயி சொல்வதை நம்புகிறேன். ஆனால் அவர் இத்தனை ஆண்டுகள் கழித்து பேசுவது தான் பிரச்சனையே. 15 ஆண்டுகள் கழித்து பேசுகிறாரே சைக்கோவாக இருப்பார் போல. கோபம் என்றால் அன்றைக்கே வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாகவா அமைதியாக இருப்பது.

 

வைரமுத்துவின் பெயரை கெடுக்க சின்மயி இப்படி செய்யவில்லை. எதற்காக 15 ஆண்டுகள் சும்மா இருந்தீர்கள் என்பதே என் கேள்வி?. எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் வைரமுத்து பற்றி பல விஷயங்கள் கேள்விப்பட்டுள்ளேன். அவர் எப்படிப்பட்டவர் என்பது திரைத்துறையில் உள்ள அனைவருக்கம் தெரியும். இது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான்.

 

வைரமுத்துவை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருந்திருக்க வேண்டும். அவரை இந்த அளவுக்கு வளர விட்டிருக்கக் கூடாது. அவரை சின்மயி தன் திருமணத்திற்கு அழைத்து ஆசிர்வாதம் வாங்கியது எல்லாம் தேவையில்லாதது. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

அது ஏன் வைரமுத்துவை மட்டும் டார்கெட் செய்ய வேண்டும். பல பாடகர்கள் மீது புகார்கள் எழுந்துள்ளது. அவற்றையும் பெரிய அளவில் கவனிக்க வேண்டும். வைரமுத்து பற்றி ரஹ்மானுக்கு தெரியாது. ஏனென்றால் அவர் கிசுகிசுக்களில் இருந்து தள்ளியே இருப்பவர். பல பெண்கள் என்னிடம் வைரமுத்து பற்றி தெரிவித்துள்ளனர்.” என்றார்.

 

ஏ.ஆர்.ரஹானா வைரமுத்து பற்றி இப்படி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, சின்மயி விவகாரத்தில் வைரமுத்து அப்படி நடந்திருக்கலாம், என்பதையும் உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளது.

Related News

3641

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

கூலி படத்தின் “மோனிகா...” பாடலும், சக்தி மசாலாவின் விளம்பர யுத்தியும்!
Wednesday September-17 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...

Recent Gallery