தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகைகள், தற்போது தைரியமாக அதைப் பற்றி பேசுவதோடு, தாங்கள் யாரால் பாதிக்கப்பட்டோம் என்பதையும் வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.
சின்மயி தொடங்கிய இந்த பாலியல் தொல்லை விவகாரத்தை தற்போது பல முன்னணி நடிகைகளும் கையில் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகை அமலா பால் தான் பிரபல இயக்குநர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறியிருப்பதோடு, அவரது பெயரையும் வெளியிட்டுள்ளதால், கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண் இயக்குநர் லீனா மணிமேகலை இயக்குநர் சிசு கணேசன் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் அமலா பால், லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை தான் ஒப்புக் கொள்கிறேன், என்று கூறியவர், தானும் அவரால் பாலியல் துன்புறுத்தலால் அவதிப்பட்டேன், என்று தெரிவித்திருக்கிறார்.
முதல் முறையாக பிரபல ஹீரோயின் ஒருவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டால் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.
லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை மறுத்து வந்த சுசி கணேசன், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால், தான் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#MeToo #MeTooIndia #LeenaManimekalai #susiganesan pic.twitter.com/Jt2sS685H5
&mdash ; Amala Paul ⭐️ (@Amala_ams) October 24, 2018
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...