‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர் யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கலந்துக்கொண்டு பிரபலமானார். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பிரபல இயக்குநர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
புகழ் பெற்ற இயக்குநர் ஒருவரை சந்திக்க சென்ற போது, அவர் யாஷிகாவின் அம்மா மூலமாக பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தாராம். அப்பா வயதுள்ள அந்த இயக்குநர் தன்னை நேரடியாக பாலியல் துன்புறுத்தல் செய்திருந்தால் நிச்சயம் புகார் கொடுத்திருப்பேன், என்று கூறியிருக்கும் யாஷிகா, அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை, என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், பொது இடத்தில் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு சரியான பதிலடி கொடுத்தாராம். போலிசில் அது பற்றியும் புகார் கூறியிருந்தாராம்.
அது மட்டுமல்ல, சமீபத்தில் ஒரு வீடியோவில் போலிஸ்காரர் ஒருவர் ஒரு பெண்ணிடம் என்ன ரேட் என கேட்ட வீடியோ வைரலானது. அதில் இருந்த பெண் யாஷிகா தானாம். இந்த தகவலை யாஷிகாவே கூறியுள்ளார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...