Latest News :

சின்மயி இப்படி செய்வார் என்று எதிர்ப்பார்க்கவில்லை! - கல்யாண் ஆதங்கம்
Wednesday October-31 2018

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியதோடு, கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட பலர் மீதும் பாலியல் புகார் கூறி வந்தார். அந்த வரிசையில் பிரபல நடன இயக்குநர் கல்யாண், இலங்கையை சேர்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்.

 

மேலும், அந்த பெண் கல்யாண் குறித்து தெரிவித்த பாலியல் புகார் பதிவை பாடகி சின்மயி ரீட்வீட் செய்து அதை வைரலாக்கி பரபரப்பாக்கினார். பிறகு, அந்த பாலியல் புகாரை பதிவு செய்த பெண்ணே, “நான் விளையாட்டுக்காக அப்படி போட்டேன், ஆனால் அதை விசாரிக்காமல் சின்மயி அப்படியே ரீட்வீட் செய்துவிட்டார்” என்று கூறினார். இதன் பிறகு கல்யாண் மீது கூறப்பட்ட புகார் பொய்யானது என்று தெரிந்தவுடன் சின்மயி, மவுனமாகிவிட்டார்.

 

இந்த நிலையில், இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடன இயக்குநர் கல்யாண், ”அந்த பெண் விளையாட்டாக கூறியதாக கூறிவிட்டார். ஆனால் அதை பரபரப்பாக்கிய சின்மயி அது சம்பந்தமாக என்னிடம் சிறு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அவர், என் விஷயத்தில் இவ்வாறு நடந்து கொள்வார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.” என்று  தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.

Related News

3695

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery