பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியதோடு, கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட பலர் மீதும் பாலியல் புகார் கூறி வந்தார். அந்த வரிசையில் பிரபல நடன இயக்குநர் கல்யாண், இலங்கையை சேர்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்.
மேலும், அந்த பெண் கல்யாண் குறித்து தெரிவித்த பாலியல் புகார் பதிவை பாடகி சின்மயி ரீட்வீட் செய்து அதை வைரலாக்கி பரபரப்பாக்கினார். பிறகு, அந்த பாலியல் புகாரை பதிவு செய்த பெண்ணே, “நான் விளையாட்டுக்காக அப்படி போட்டேன், ஆனால் அதை விசாரிக்காமல் சின்மயி அப்படியே ரீட்வீட் செய்துவிட்டார்” என்று கூறினார். இதன் பிறகு கல்யாண் மீது கூறப்பட்ட புகார் பொய்யானது என்று தெரிந்தவுடன் சின்மயி, மவுனமாகிவிட்டார்.
இந்த நிலையில், இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடன இயக்குநர் கல்யாண், ”அந்த பெண் விளையாட்டாக கூறியதாக கூறிவிட்டார். ஆனால் அதை பரபரப்பாக்கிய சின்மயி அது சம்பந்தமாக என்னிடம் சிறு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அவர், என் விஷயத்தில் இவ்வாறு நடந்து கொள்வார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...