‘குற்றப்பரம்பரை’ படத்தின் விவகாரத்தில் இதுவரை அமைதிக்காத்து வந்த இயக்குநர் பாலா, தனது அதிடியை தொடங்கிவிட்டார். இப்பிரச்சினை குறித்து பத்திரிகையாளர்களிடம் நேற்று விளக்கம் அளித்த பாலா, இயக்குநர் பாரதிராஜாவுக்கு தான் எச்சரிக்கை விடுப்பதாகவும் அறிவித்தார். இதனால், கோடம்பாக்கத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
‘குற்றப்பரம்பரை’ படம் தனது கனவு படம் என்றும், அதை தான் மட்டுமே எடுக்க வேண்டும், என்ற ரீதியிலும் சமீபத்தில் பேசிய பாரதிராஜாவும், அப்படத்தின் கதையை எழுதியுள்ள ரத்னகுமாரும், தொடர்ந்து தன்னை விமர்சனம் செய்து வருவதை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது, என்று கூறிய பாலா, இது தான் பாரதிராஜாவுக்கும், ரத்னகுமாருக்கும் நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை, என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், ‘குற்றப்பரம்பரை’ என்ற தலைப்பில் நான் படம் எடுக்கவில்லை, அதே காளக்கட்டத்தில் நடந்த வேறு ஒரு சம்பவத்தை வைத்து, கற்பனையோடு உருவாக்கிய கதை ஒன்றை தான் படமாக எடுக்கிறேன். இதை பாரதிராஜாவிடம் வேறு ஒருவர் மூலம் தெரியப்படுத்தியும் விட்டேன். அவரிடம் நேரடியாக பேசுவதற்காக பல முறை போனில் தொடர்பு கொண்டால், அவர் போனை எடுக்காமல் நிராகரிக்கிறார். அதுமட்டும் இன்றி, என்னை குறித்து கடுமையான விமர்சனம் செய்து வருகிறார். இதை நான் நான்கு முறை பொருத்துக்கொண்டேன், இனியும் பொருத்துக் கொண்டிருந்தால், நான் எதற்கும் லாயக்கி இல்லாத மயுமட்டையாகிவிடுவேன், என்பதால் தான் இந்த விளக்கத்தையும், பாரதிராஜாவுக்கு எச்சரிக்கையும் விடுக்கிறேன், என்று பாலா கூறினார்.
உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...