தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட மீ டூ விவகாரத்தில் முதலில் சிக்கிய கவிஞர் வைரமுத்து, பல்வேறு புகார்களை எதிர்கொண்டு வந்த நிலையில், மன அமைதிக்காக மதுரையில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தாராம்.
அப்போது, அவருக்கு உணவு ஒவ்வாமையினால் உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட வைரமுத்து சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், நேற்று அவருக்கு மீண்டும் உடல் நலம் சரியில்லாமல் போக உடனே சென்னை க்ரீம்ஸ் சாலை அப்பல்லோவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீண்டும் அவருக்கு உணவு ஒவ்வாமையினால் தான் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மீ டூ விவகாரத்தினால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் வைரமுத்துவுக்கு தற்போது உடல் அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, அவருக்கு வந்திருக்கும் உணவு ஒவ்வாமை என்ற புது பிரச்சினையினாலும் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...