தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட மீ டூ விவகாரத்தில் முதலில் சிக்கிய கவிஞர் வைரமுத்து, பல்வேறு புகார்களை எதிர்கொண்டு வந்த நிலையில், மன அமைதிக்காக மதுரையில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தாராம்.
அப்போது, அவருக்கு உணவு ஒவ்வாமையினால் உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட வைரமுத்து சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், நேற்று அவருக்கு மீண்டும் உடல் நலம் சரியில்லாமல் போக உடனே சென்னை க்ரீம்ஸ் சாலை அப்பல்லோவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீண்டும் அவருக்கு உணவு ஒவ்வாமையினால் தான் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மீ டூ விவகாரத்தினால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் வைரமுத்துவுக்கு தற்போது உடல் அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, அவருக்கு வந்திருக்கும் உணவு ஒவ்வாமை என்ற புது பிரச்சினையினாலும் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...