Latest News :

அதிமுக-வின் தொடர் போராட்டம்! - முன் ஜாமீன் பெற்ற முருகதாஸ்
Friday November-09 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் ஆளும் அதிமுக அரசு, அக்காட்சிகளை நீக்க வலியுறுத்தியதோடு, படத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தது.

 

இதற்கிடையே, நேற்று முதல் சர்கார் ஓடும் திரையரங்கங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக தொண்டர்கள் விஜய் பேனர்களை கிழித்தெரிந்தனர். இதையடுத்து, தமிழகத்தின் சில திரையரங்கங்களில் சர்கார் காட்சி நேற்று நிறுத்தப்பட்டது.

 

மேலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யுமாறு அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவரை நேற்று இரவு போலீசார் கைது செய்ய முயற்சித்ததாக தயாரிப்பு தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால், காவல் துறை இதனை மறுத்தது.

 

இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

 

இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸை நவம்பர் 27 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் கிடைத்தபிறகு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

Related News

3720

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery