Latest News :

நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை! - ரஜினிகாந்த்
Tuesday November-13 2018

அரசியலில் ஈடுபட உள்ள நடிகர் ரஜினிகாந்த், அவ்வபோது தனது கருத்து மூலம் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாவிட்டது. 

 

இதற்கிடையே, ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் யார் யார், என்பது தனக்கு தெரியாது என்று ரஜினிகாந்த் கூறியது போல நேற்று செய்தி பரவியது. மேலும், பா.ஜ.க ஆபத்தான கட்சி என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல் பரவியது.

 

இந்த நிலையில், ராஜீவ் கொலை குற்றவாளிகள் மற்றும் பா.ஜ.க ஆபத்தான கட்சி என்று தான் கூறியதாக பரவிய தகவல்களை மறுத்திருக்கும் ரஜினிகாந்த், ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விவகாரம் குறித்து ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர், என்று தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த ரஜினிகாந்த், “7 பேர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. பேரறிவாளன் பரோலில் வெளிவந்த போது அவரிடம் தொலைபேசியில் பேசினேன். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து.

 

பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே. ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்யட்டும்.

 

நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை, முழுமையாக இறங்கியதும் முழு பதில் சொல்வேன்.” என்று கூறினார்.

Related News

3741

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery