நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா, அஷ்வின் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவான நிலையில், திடீரென்று கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்ததோடு, நீதிமன்றம் மூலம் விவாகரத்தும் பெற்றுவிட்டார்.
விவாகரத்திற்கு பிறகு திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தவர், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த வாரம் மற்றொரு தகவல் வெளியானது. மேலும் செளந்தர்யா - விசாகன் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால், இதற்கு செளந்தர்யா தரப்போ அல்லது விசாகன் தரப்போ எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.
தொழிலதிபர் வணங்காமுடியின் மகனான விசாகன் எம்.பி.ஏ பட்டதாரி என்றும், அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றதோடு, ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், என்றும் நாம் ஏற்கனவே தெரிவித்தோம்.
தற்போது விசாகனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Apex என்ற புகழ் பெற்ற மற்றும் இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனம் விசாகனுக்கு சொந்தமான நிறுவனமாம். இந்த நிறுவனத்தின் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானம் வருவதோடு, விசாகனுக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் ஒரு படத்தில் விசாகன் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...