கஜா புயலின் தாக்கத்தினால் தமிழகத்தின் 18 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதில் சில மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கிறது. குறிப்பாக வேதாரண்யம் உள்ளிட்ட சில பகுதிகளில் உயிர் சேதம் பொறுள் சேதம் அதிகமாக உள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் சரியான கணிப்பால், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் உயிர் சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டாலும், சிலர் புயலின் கோரதாண்டவத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் நிலையில், தமிழ்த் திரைப்பட நடிகர்களும் நிவாரண நிதி வழங்க தொடங்கியுள்ளார்கள்.
நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்களான நடிகர்கள் சூர்யா, கார்த்தி, மருமகள் ஜோதிகா ஆகியோர் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவிக்க, நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
இவர்களைப் போல மேலும் சில நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவார்கள், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...