Latest News :

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் நிதி உதவி!
Monday November-19 2018

கஜா புயலின் தாக்கத்தினால் தமிழகத்தின் 18 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதில் சில மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கிறது. குறிப்பாக வேதாரண்யம் உள்ளிட்ட சில பகுதிகளில் உயிர் சேதம் பொறுள் சேதம் அதிகமாக உள்ளது.

 

வானிலை ஆய்வு மையத்தின் சரியான கணிப்பால், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் உயிர் சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டாலும், சிலர் புயலின் கோரதாண்டவத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் நிலையில், தமிழ்த் திரைப்பட நடிகர்களும் நிவாரண நிதி வழங்க தொடங்கியுள்ளார்கள்.

 

நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்களான நடிகர்கள் சூர்யா, கார்த்தி, மருமகள் ஜோதிகா ஆகியோர் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவிக்க, நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம்  வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

 

இவர்களைப் போல மேலும் சில நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவார்கள், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

3773

பிரமாண்டமாக நடைபெற்ற ‘டெக்ஸ்லா’ பட துவக்க விழா!
Saturday March-07 2026

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...

அரசியல் கட்சி மாநாடு போல் நடந்த ‘லீடர்’ பட டீசர் வெளியீட்டு விழா!
Saturday March-07 2026

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது...

சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வருத்தம்
Saturday March-07 2026

அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மரகதமலை’...

Recent Gallery