Latest News :

ஜோதிகா எதிர்ப்பார்க்கும் அந்த வாய்ப்பு!
Wednesday November-21 2018

‘வாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ஜோதிகா, சூர்யா நடித்த ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானர். தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.

 

முன்னணி ஹீரோயினாக இருக்கும் போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகும் ‘மொழி’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாலும், திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

 

தற்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கும் ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம், வெற்றியோடு தனது ரீ எண்ட்ரியை தொடங்கியவர், ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ என்று தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதோடு, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘காற்றின் மொழி’ திரைப்படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், ஜோதிகா ஒரு வாய்ப்புக்காக ரொம்பவே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதாவது, நிஜத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா ஜோடி, திருமணத்திற்குப் முன்பு பல படங்களில் காதலர்களாகவும், கணவன் - மனைவியாகவும் நடித்திருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு இவர்கள் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. அப்படி ஒரு வாய்ப்புக்காக தான் ஜோதிகா காத்துக்கொண்டிருக்கிறாராம்.

 

Surya and Jyothika

 

ஜோதிகா மட்டும் அல்ல, அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் சூர்யாவும் நடிக்க ரெடியாகவே இருக்கிறாராம். ஆனால், இதுவரை எந்த இயக்குநரும் அப்படியொரு வாய்ப்போடு எங்களை அனுகவில்லை, நிஜவாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்தவர்கள், திரையில் காதலித்து நடிப்பதை இயக்குநர்கள் விரும்புவதில்லை என நினைக்கிறேன்., என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜோதிகா கூறியுள்ளார்.

 

இயக்குநர்களே, இந்த நிஜ காதல் தம்பதி எதிர்ப்பார்க்கும் வாய்ப்பை சீக்கிரம் கொடுங்க...

Related News

3781

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

பிரமாண்டமாக நடைபெற்ற ‘டெக்ஸ்லா’ பட துவக்க விழா!
Saturday March-07 2026

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...

Recent Gallery