சமுத்திரக்கனி இயக்கத்தில் சகிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிநயா. வாய் பேச முடியாத, காது கேற்கும் திறன் அற்றவராக இருந்தாலும், அந்த குறைகள் தன்னிடம் இருப்பதை காட்டிக்கொள்ளாமல் திரையில் தோன்றும் அபிநயாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்து வந்த அபிநயா, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கானா தேர்தலில் அபிநயாவும் களம் இறங்கியுள்ளார். வேட்பாளராக அல்ல, தூதராக. ஆம், வர இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் அசெம்பிளி தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போடுவதின் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக, நடிகை அபிநயாவை விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளது.
இதன் மூலம், விரைவில் அபிநயாவை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான குறும்படத்தை தேர்தல் ஆணையம் தயரித்து வெளியிட உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...