Latest News :

நடிகர் ராதாரவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய பாடகி சின்மயி!
Thursday November-22 2018

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய பிரபல பின்னணி பாடகி சின்மயி, அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்ததோடு, தொடர்ந்து பல மீது பாலியல் புகார் கூறி வந்தார். சின்மயியை தொடர்ந்து மேலும் சில நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி வந்ததால், தமிழ் திரையுலகில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

 

இதையடுத்து, சிலர் மீ டூ புகார் கூறும் நடிகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த நிலை நீடித்தால், நாடகங்களில் ஆண்கள் பெண்கள் வேடம் போடுவது போல, சினிமாவிலும் வரும் என்று கூறி, எச்சரிக்கையும் விடுத்தனர்.

 

இதற்கிடையே, பாடகியாக மட்டும் இன்றி பிரபல ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த சின்மயி, டப்பிங் யூனியனிலும் உறுப்பினராக இருந்தார். ஆனால், அவர் கடந்த இரண்டு வருடங்கள் சந்தா கட்டாததால், அவரை சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த செய்தியை நாம், ஏற்கனவே நமது தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

 

இந்த நிலையில், தான் டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணியில் நடிகர் ராதாரவி இருப்பதாக சின்மயி குற்றம் சாட்டியுள்ளார். டப்பிங் யூனியனின் தலைவராக இருக்கும் ராதாரவி, மீ டூ புகார் கொடுத்ததால் தன்னை நீக்கியுள்ளார். அவர் தன்னை எதிர்த்து பேசுபவர்களை நீக்கிவிடுவார், என்று சின்மயி குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும், ஏற்கனவே தனக்கு ரெட் போடுவதாகவும் ராதாரவி மிரட்டியதாக, குற்றம் சாட்டியிருக்கும் சின்மயி, தனக்கு எந்தவித முன் அறிவிப்பு தராமலே யூனியனில் இருந்து நீக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Related News

3790

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

பிரமாண்டமாக நடைபெற்ற ‘டெக்ஸ்லா’ பட துவக்க விழா!
Saturday March-07 2026

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...

Recent Gallery