Latest News :

புயலால் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டி தரும் ராகவா லாரன்ஸ்!
Friday November-23 2018

தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்  கஜா புயலால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அரசாங்கம் மற்றும் பல தொண்டு நிறுவனங்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்போவதாக அறிவித்துள்ளார்.

 

இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில், “கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்.

 

எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீடு மட்டுமில்லை, இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப்பட்ட 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன். அப்படி பாதிக்கப் பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.

 

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள், நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன். ஒரு தனியார் தொலைகாட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

 

அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள், உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்.” என்றார்.

Related News

3794

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery