கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னணி வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 9 ஆம் தேதி ‘பேட்ட’ படத்தின் ஆடியோ வெளியாக இருக்கும் நிலையில், படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் ‘பேட்ட’ படத்தை கலைப்புலி எஸ்.தாணுவிடம் கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை தயாரித்து முடித்துவிட்ட சன் பிக்சர்ஸ், வெளியீட்டு உரிமையை தாணுவிடம் வழங்கிவிட்டதாம்.

ஏற்கனவே ரஜினியின் ‘கபாலி’ படத்தை தனது விளம்பர யுக்தியால் மிகப்பெரிய இடத்திற்கு எடுத்துச் சென்றவர் தாணு, என்பதால், ‘பேட்ட’ படத்தின் விளம்பரமும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...