Latest News :

குடி போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய பிரபல தமிழ் நடிகை! - போலீசிடம் பிடிபட்டார்
Monday November-26 2018

தமிழ் சினிமா நடிகர்கள் பலர் குடி போதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டி, போலிசிடம் சிக்கும் சம்பவங்கள் அவ்வபோது சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில், தற்போது பிரபல நடிகை ஒருவர் குடி போதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கியுள்ளார்.

 

பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகளும், நடன இயக்குநருடம் நடிகையுமான காயத்ரி ரகுராம், தான் அந்த மது போதை மங்கை.

 

பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமான காயத்ரி ரகுராம், தற்போது சில படங்களில் நடித்து வருவதோடு, சில படங்களில் நடன இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். 

 

இந்த நிலையில், சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக அடையாறை நோக்கி வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் தாறுமாறாக வருவதை கண்ட போலீசார், அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

 

அதில், காரை ஓட்டி வந்தது நடிகை காயத்ரி ரகுராம் என்பது தெரிந்தது. கார் கண்ணாடியை கீழே இறக்கியதும் அவரிடம் மதுபான வாடை வந்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரை காரில் இருந்து இறங்கும்படியும், மது போதையை கண்டுபிடிக்கும் கருவியில் மூச்சு காற்றை ஊதும்படியும் கூறினார்.

 

Gayathri Raghuram

 

ஆனால், போலீசாருடன் தகராரில் ஈடுபட்ட காயத்ரி, தான் மது குடிக்கவில்லை என்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். பிறகு ஒரு வழியாக அவர் மது போதையை கண்டுபிடிக்கும் கருவியில் மூச்சு காற்றை விட்டவுடன், அவர் அதிகமான மது அருந்திருப்பது தெரிய வந்தது. உடனே, அவரை கார் ஓட்ட அனுமதிக்காத போலீசார், ஒரு காவலர் மூலம் அவரை பத்திரமாக வீட்டில் இறக்கிவிட்ட பிறகு, அவரது காரை அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர்.

 

மேலும், மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக நடிகை காயத்ரிக்கு ரூ.3,500 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத்தை அவர் நேற்று அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் செலுத்திவிட்டு தனது காரை எடுத்துச் சென்றார்.

 

தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவலால் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

3801

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery