பாலியல் புகார் மூலம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் மீதும் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது சென்னையில் செட்டிலாகியுள்ள ஸ்ரீரெட்டி தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ஸ்ரீரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்ததால், அவர் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டி, தற்போது லாரன்ஸை புகழ்ந்து வருகிறார். மேலும், சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர், தனக்கு வரும் பட வாய்ப்புகளை தடுக்க பார்ப்பதாக ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். அந்த நடிகரின் பெயரை குறிப்பிடாத அவர், அந்த நடிகர் தெலுங்கு ஹீரோக்களுக்கு அதிகம் நெருக்கமானவர், என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக ரசிகர்களை நம்பி இங்கு வந்திருக்கும் தனக்கு அந்த நடிகர் தொல்லை தருவதாக கூறிய அவர், இந்த உலகத்தில் நான் வாழ்வதா வேண்டாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...