சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க நடிகர் சங்கம் சார்பில், மன அழுத்தத்தில் இருக்கும் நடிகர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் குழு ஒன்றும் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், பிரபல நடிகை ரியாமிகா சென்னையில் வரது வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
’எக்ஸ் வீடியோஸ்’, ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் ரியாமிகா, சென்னை வளசரவாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். பெங்களூரை சேர்ந்த இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் தங்கி சினிமாவில் நடித்து வந்த நிலையில், இன்று அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்போது ரியாமிகாவுக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...