தமிழ் சினிமாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஜி.எஸ்.டி யை உடைத்தெரிந்த முதல் படம் என்றால் அது ‘மீசையை முறுக்கு’ தான். படம் வெளியாகி, மிகப்பெரிய ஓபனிங் பெற்றதோடு, தமிழகம் முழுவதும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி இப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது.
இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொல்நுட்ப கலைஞர்கள் பெரும்பாலானோர் புதுமுகங்கள் என்றாலுலும், அவர்களது பணி அனுபவசாலிகளாக காட்டியது.
தற்போது ‘மீசையை முறுக்கு’ படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், ஹீரோயினாக நடித்த ஆத்மிகாவுக்கும் பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதாம். இருந்தாலும், கதை தேர்வில் கவனம் செலுத்தி வருபவர், தற்போது ‘துருவங்கள் 16’ இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதில் அரவிந்த்சாமி தான் ஹீரோ. மேலும், சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
‘நரகாசூரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் கவுதம் மேனனின் ஒண்ராகா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் டோ0ஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைக்கிறார்.
வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி ஊட்டில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்களுக்கு ஊட்டியிலேயே நடைபெற இருக்கிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...