ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்டமான முறையில் ‘2.0’ படம் உருவாகியுள்ளது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்திருப்பதால், படத்திற்கு இந்திய அளவில் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மூலமாகவும் படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று ‘2.0’ படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கே சென்னை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் சிறப்பு காட்சிகள் போடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், 2.0 படத்திற்கு எதிராக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 2.0 படத்தில் செல்போன்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறியிருக்கும் இந்திய செல்போன் ஆபரேட்டர்கள் சங்கத்தினர், படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று மத்திய தணிக்கைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
நேற்று அளிக்கப்பட்ட இந்த புகார் மனு மீது இன்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டாலும், படம் இன்று வெளியாகிவிட்டதால், படத்திற்கு எந்தவித பிரச்சினையும் வராது என்றும் கூறப்படுகிறது.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...