தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஆண்ட்ரியா ‘தரமணி’ என்ற படத்தின் மூலம் பாராட்டை பெற்றாலும், அவருக்கு உடனடியாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்தார். இதனால், அவர் தனது அதிருப்தியை தெரிவித்து ஆதங்கப்படவும் செய்தார்.
தற்போது, ஆண்ட்ரியாவுக்கு சில படங்களின் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதில் சில ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகும்.
இந்த நிலையில், கண் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் ஆண்ட்ரியா கலந்துக்கொண்டார். அப்போது அவரிடம் நிருபர்கள், மீ டூ பற்றி கேள்வி கேட்டார்கள்.
உடனே கோபப்பட்ட ஆண்ட்ரியா, ”மீ டூ வைப் பற்றி ஏங்க கேக்குறீங்க, அது வேணாம், என்னை விட்றுங்க, மீ டு பத்தி நான் சரியா படிக்கலை. எனக்குத் தெரியாமல் நான் ஏதாவது பேசக்கூடாது”, என்று கூறிவிட்டு கிளம்பிட்டாரு.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...