Latest News :

ரூ.10 லட்சம் செலவில் சமூக சேவகருக்கு வீடு கட்டி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!
Saturday December-01 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினர் பல வகையில் உதவி செய்து வரும் நிலையில், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது சொந்த செலவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடு கட்டி கொடுக்கிறார். இதற்காக தனது குழுவினருடன் டெல்டா மாவட்டத்தில் முகாமிட்டிருக்கும் லாரன்ஸ், தற்போது வீடு கட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

 

ஏற்கனவே, முதியவர் ஒருவருக்கு வீடு கட்டும் பணியை பூமி பூஜையுடன் தொடங்கிய ராகவா லாரன்ஸ், இரண்டாவதாக சமூக சேவகர் ஆலங்குடி கணேசனுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பணியை பூமி பூஜையுடன் தொடங்கியுள்ளார்.

 

சாதாரன ஏழையாக வாழ்ந்தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை பிடித்திருக்கும் ஆலங்குடி 515 கணேசன்.

 

அனாதையாக பிறந்தவர் யாரும் இல்லை, ஆனால் யாரும் அனாதையாக இறக்கக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையால் ஏறக்குறைய 500 அனாதை சடலங்களை அந்தந்த மத முறைப்படி ஈமக்கிரியை செய்து தகனம் மற்றும் அடக்கம் செய்தவர் இந்த கணேசன்.

 

மேலும், இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் யாருக்காவது ஏதாவது ஒன்று என்றால் ஓடோடி வந்து உதவி செய்பவராகவும் இவர் இருக்கிறார்.

 

கேரள வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம் நிதி திரட்டி அனுப்பி வைத்த இவரது வீடும் கஜா புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஆனால், அதை சிறிது கூட பொருட்படுத்தாத கணேசன், கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய போய்விட்டார்.

 

இதை கேள்விப்பட்ட ராகவா லாரன்ஸ், அந்த வீட்டை நேரில் போய் பார்த்து உடனடியாக புதிய வீட்டை கட்டிக் கொடுக்க முடிவெடுத்து அதற்கான பூமி பூஜையை போட்டு, கட்டுமான பணியை உடனடியாக தொடங்கிவிட்டார்.

 

மேலும், சாதாரண வீடு மாதிரி இல்லாமல் எல்லா வசதிகளுடன் அவரை வாழ வைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக, பாத்திரங்கள், கட்டில், பீரோ, மின் விசிறி, ஏ.சி என்று அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொடுக்கவும் லாரன்ஸ் முடிவு செய்துள்ளார். இதற்காக மொத்தமாக சுமார் ரூ.10 லட்சத்திற்கு மேல் ஆகும் என்றாலும், அதனை செய்ய லாரன்ஸ் தயாராகவே இருக்கிறார்.

 

காரணம், ஆலங்குடி கணேசனை தனது அப்பா ஸ்தானத்தில் ராகவா லாரன்ஸ் பார்க்கிறாராம்.

Related News

3835

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery