தமிழ் மற்றும் தெலுங்கில் இரண்டு சீசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்த முடிந்த நிலையில், இந்தியில் தற்போது 12 வது சீசனை பிக் பாஸ் நிகழ்ச்சி எட்டியிருக்கிறது. இதில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்கேற்றுள்ளார். ஆரம்பம் முதல் ஸ்ரீசாந்த் பெரும் சர்ச்சைகளில் சிக்கியதால், பிக் பாஸ் நிகழ்ச்சி படு பரபரப்பாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று சுரபி ராணா என்பவருடன் ஸ்ரீசாந்த் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சண்டை முற்றியதால், ஸ்ரீசாந்த் சுரபி ராணாவை அடிக்க கை ஓங்கி சென்றார். மேலும், கோபத்தில் பாத்ரூம் சென்று கதவை மூடிக்கொண்டவர், பாத்ரூம் சுவற்றில் மோதிக்கொண்டார். இதனால் அவரது தலையில் வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை ஸ்ரீசாந்தின் மனைவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என பிக்பாஸ் டீம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...