மும்பையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள நான்கு நீர்நிலைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருவதல், மும்பை நகரேமே தற்போது தண்ணீரில் தத்தளித்து வருகிறது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பை மற்றும் அதன் புறந்கர் பகுதிகளில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் பேரிடர் மேலாண்மை படையுடன் மும்பை மாநகராட்சி ஊழியர்களும் இணைந்து வெள்ளப் பாதிப்பில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மும்பை வெள்ளத்தில் நடிகர் மாதவன் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வரும் மாதவன், அதன் படப்பிடிப்பிற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார்.
நேற்று பெய்த பலத்த மழையின் போது நடிகர் மாதவன் காரி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அவரது கார் சிக்கிக்கொண்டதாம். வெள்ள்ப்பெருக்கு அதிகமானதால், அவரது கார் பழுதடைந்து நடு ரோட்டில் நின்றுவிட்டதாம்.
இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்த மாதவன், இந்த மழை நீரை கடந்து எப்படி வீட்டிற்கு செல்வேன், என்று தனது வருத்தத்தையும் தெரிவித்திருந்தார்.
தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது...
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது...
After more than a decade of reshaping Indian film music with award-winning background scores, chart-topping albums, and viral anthems, renowned composer and performer Anirudh Ravichander has announced the launch of Albuquerque Records, an artist-owned music label that marks a defining new chapter in his creative journey...