Latest News :

சஞ்சீவால் நடுரோட்டில் சத்தம் போட்டு கத்திய ஆல்யா மானசா!
Wednesday December-05 2018

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் நிஜ காதல் ஜோடிகளாகியிருக்கும் சஞ்சீவ் - ஆல்யா மானாசா தான் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறார்கள்.

 

எப்போதும் போல, முதலில் தங்களது காதல் விவகாரத்தை மறுத்து வந்த இவர்கள் தற்போது தங்களது காதலை வெளி உலகிற்கு அறிவித்திருப்பதோடு, தங்கள் காதல் கதைகள் பற்றி பல ஊடகங்களில் பேட்டியும் கொடுக்க தொடங்கியுள்ளார்கள்.

 

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தங்கள் காதல் பற்றி பேசிய சஞ்வீவ், மானசாவை நடுரோட்டில் சத்தம் போட்டு கத்த வைத்த சம்பவம் ஒன்றை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

 

அதாவது, ஆல்யா மானசா ஏதோ தவறு செய்துவிட்டார் என்பதால் சஞ்சீவ் அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டு மிகவும் சத்தமாக தன்னை காதலிக்கிறேன், என கூற சொன்னாராம். முதலில் கூச்சத்துடன் மெதுவாக சொன்ன ஆல்யாவை சத்தமாக சொல் என சஞ்சீவ் கூற, யாரும் பார்க்காத வண்ணம் சத்தமாக கூறிவிட்டு காருக்குள் ஏறிவிட்டாராம் ஆல்யா.

 

இந்த சம்பவத்தை இருவரும் கூறி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related News

3850

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery