பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் நிஜ காதல் ஜோடிகளாகியிருக்கும் சஞ்சீவ் - ஆல்யா மானாசா தான் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறார்கள்.
எப்போதும் போல, முதலில் தங்களது காதல் விவகாரத்தை மறுத்து வந்த இவர்கள் தற்போது தங்களது காதலை வெளி உலகிற்கு அறிவித்திருப்பதோடு, தங்கள் காதல் கதைகள் பற்றி பல ஊடகங்களில் பேட்டியும் கொடுக்க தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தங்கள் காதல் பற்றி பேசிய சஞ்வீவ், மானசாவை நடுரோட்டில் சத்தம் போட்டு கத்த வைத்த சம்பவம் ஒன்றை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது, ஆல்யா மானசா ஏதோ தவறு செய்துவிட்டார் என்பதால் சஞ்சீவ் அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டு மிகவும் சத்தமாக தன்னை காதலிக்கிறேன், என கூற சொன்னாராம். முதலில் கூச்சத்துடன் மெதுவாக சொன்ன ஆல்யாவை சத்தமாக சொல் என சஞ்சீவ் கூற, யாரும் பார்க்காத வண்ணம் சத்தமாக கூறிவிட்டு காருக்குள் ஏறிவிட்டாராம் ஆல்யா.
இந்த சம்பவத்தை இருவரும் கூறி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...