Latest News :

தொழிலதிபர் கொலை! - பிரபல சீரியல் நடிகை கைது
Sunday December-09 2018

தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட பிரபல டிவி சீரியல் நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

‘சாத் நினபா சத்யா’ என்ற இந்தி சீரியலில் நடித்து பிரபலமானவர் தேவுலீனா பட்டாச்சாரிஜி. பல வருடங்களாக இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், மும்பை போலீசார் நடிகை தேவுலீனாவை கொலை வழக்கு ஒன்றில் கைது செய்துள்ளனர்.

 

ராஜேஸ்வர் என்ற தொழிலதிபர், கடந்த ஒரு வாரமாக வீட்டுக்கு வரவில்லை என்று போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

 

Devoleena

 

தொழிலதிபர் ராஜேஸ்வருடன் நடிகை தேவுலீனா தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த கொலை வழக்கு தொடர்பாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அந்த தொழிலதிபர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. அவர்களை அனைவரையும் போலீசார் விசாரணை வலையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

 

இந்த சம்பவம் பாலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Related News

3866

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery