கடந்த ஆண்டு தீபாவளியாகட்டும், இந்த ஆண்டு தீபாவளியாகட்டும் அது விஜய் தீபாவளியாகவே முடிந்தது. ‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ‘சர்கார்’ படம் மூலம் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்த விஜய், தற்போது தனது 63 வது படத்திற்கு தயாராகிவிட்டார்.
இதற்கிடையே, தமிழகம் மட்டும் இன்றி பல வெளிநாடுகளிலும் வசூலில் சக்கை போடு போட்ட ‘சர்கார்’ இன்னும் சில நாட்களில் 50 வது நாளை தொட இருக்கிறது. இதனை பெரும் விழாவாக கொண்டாட, பல பகுதிகளில் இருக்கும் விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி சில்வர் ஸ்கீரின் திரையரங்கம் மிகப்பெரிய அளவில் கொண்டாட முடிவ் செய்திருக்கிறதாம்.
விஜய், அஜித் என்று இரு உச்ச நடிகர்களின் படங்களை பாராபட்சமின்றி கொண்டாடி வரும் ரோகினி திரையரங்கம், ‘சர்கார்’ படம் மெஹா ஹிட் படம் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், விரைவில் படத்தின் 50 வது நாளை கொண்டாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...