கடந்த ஆண்டு தீபாவளியாகட்டும், இந்த ஆண்டு தீபாவளியாகட்டும் அது விஜய் தீபாவளியாகவே முடிந்தது. ‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ‘சர்கார்’ படம் மூலம் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்த விஜய், தற்போது தனது 63 வது படத்திற்கு தயாராகிவிட்டார்.
இதற்கிடையே, தமிழகம் மட்டும் இன்றி பல வெளிநாடுகளிலும் வசூலில் சக்கை போடு போட்ட ‘சர்கார்’ இன்னும் சில நாட்களில் 50 வது நாளை தொட இருக்கிறது. இதனை பெரும் விழாவாக கொண்டாட, பல பகுதிகளில் இருக்கும் விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி சில்வர் ஸ்கீரின் திரையரங்கம் மிகப்பெரிய அளவில் கொண்டாட முடிவ் செய்திருக்கிறதாம்.
விஜய், அஜித் என்று இரு உச்ச நடிகர்களின் படங்களை பாராபட்சமின்றி கொண்டாடி வரும் ரோகினி திரையரங்கம், ‘சர்கார்’ படம் மெஹா ஹிட் படம் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், விரைவில் படத்தின் 50 வது நாளை கொண்டாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...