பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, ‘பரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ப்ரொசித் ராய் என்பவர் இயக்கும் இப்படத்தை அனுஷ்கா சர்மா, தனது கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
நடிப்பதோடு படங்களையும் சொந்தமாக தயாரித்து வரும் அனுஷ்கா சரிமாவின் மூன்றாவது தயாரிப்பான இப்படத்திற்உ அனுபம் ராய் இசையமைக்கிறார்.
நேற்று இரவு படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இந்த சம்பவத்தின் போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனுஷ்கா சர்மா, இந்த விபத்தையும் உயிர் பலியையும் பார்த்து மிரண்டு போனதுடன், தற்போது அதிர்ச்சியில் இருந்து வெளியே வராமல் இருக்கிறார்.
இந்த சம்பவத்தால் ‘பரி’ படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது...
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது...
After more than a decade of reshaping Indian film music with award-winning background scores, chart-topping albums, and viral anthems, renowned composer and performer Anirudh Ravichander has announced the launch of Albuquerque Records, an artist-owned music label that marks a defining new chapter in his creative journey...