சினிமாவோ அரசியலோ, மத்திய அரசோ மாநில அரசோ அவ்வபோது தனது பளீர் கருத்தால் பரபரப்பை ஏற்படுத்தும் மன்சூர் அலிகான், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆனதில் இருந்து, தனது கருத்தை ரொம்ப சாந்தமாகவே வெளிப்படுத்தி வருகிறார்.
அப்படி, அஜித்துக்கு அவர் வைத்த கோரிக்கை ஒன்று சாந்தமாக மட்டும் இன்றி ஆன்மீக சம்மந்தமானதாகவும் இருப்பது தான் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.
தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கல், என்று தொடங்கியவர், ”தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படம் அயல் தொழில் கலைஞர்களை வைத்து எடுத்துவிட்டீர்
தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது, தமிழ் நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும், படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர், தமிழ் நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயில்களுக்கு வந்திருக்க கூடாதா?
உரிமையுடன்
நடிப்புத் தொழிலாளி மன்சூரலிகான், என்று முடித்திருக்கிறார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...