சினிமாவோ அரசியலோ, மத்திய அரசோ மாநில அரசோ அவ்வபோது தனது பளீர் கருத்தால் பரபரப்பை ஏற்படுத்தும் மன்சூர் அலிகான், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆனதில் இருந்து, தனது கருத்தை ரொம்ப சாந்தமாகவே வெளிப்படுத்தி வருகிறார்.
அப்படி, அஜித்துக்கு அவர் வைத்த கோரிக்கை ஒன்று சாந்தமாக மட்டும் இன்றி ஆன்மீக சம்மந்தமானதாகவும் இருப்பது தான் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.
தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கல், என்று தொடங்கியவர், ”தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படம் அயல் தொழில் கலைஞர்களை வைத்து எடுத்துவிட்டீர்
தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது, தமிழ் நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும், படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர், தமிழ் நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயில்களுக்கு வந்திருக்க கூடாதா?
உரிமையுடன்
நடிப்புத் தொழிலாளி மன்சூரலிகான், என்று முடித்திருக்கிறார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...